வியாழன், 21 நவம்பர், 2013

ஸ்ரீராகவேந்திரர்

நானும் எனது மனைவியும் 1991 இல் ஸ்ரீராகவேந்த்ரரின் நேரடி ஆசிர்வாதம் அனுபவித்தவர்கள். அதற்காக நாங்கள் எல்லா வளமும்  பெற்று பெரு வாழ்வு வாழ்கிறோம் என்பதல்ல இதற்கு அர்த்தம். இருப்பதைக் கொண்டு மேலும் வளம் பெறுவது அவராலேயே என்பது எங்கள் எண்ணம். எங்கள் மூலம் ஒரு 10 பேர் அவரை நாடியிருக்கலாம். அவரை பாடத் தெரியாததால் அவரைப் பற்றிய, அவரின் மந்த்ராலயம் பற்றிய விஷயதோடு இந்த பதிவை ஆரம்பிக்க ஸ்ரீராகவேந்திரர் அனுகூலமளிப்பார் என்று நம்பியே இன்று பதிவிடுகிறேன்.

இங்கே படங்கள் ஒரு ஆங்கில தளத்தில் நான் பெற்று வழங்கியது.
அந்த அனாமதேயனுக்கு நன்றி.

பல முறை நாங்கள் மந்திராலயம் சென்று ஸ்ரீராகவேந்த்ரரை வணங்கியிருந்தாலும் இது போன்று ஒரு பதிவில் அவரைப் பற்றி எழுதவேண்டும் எனத் தோன்றியது இந்த பதிவை நான் எழுதவேண்டும் என்று நான் முடிவு செய்த பின்தான். இப்போழுதுதான் அதற்கும் வாய்ப்பு வந்தது.

மந்த்ராலயம் பலருக்கு இப்போது புதிய இடம் இல்லை. இது நான் 1991இல் முதலில் சென்று பார்த்த போது இருந்ததை விட இப்போதெல்லாம் பக்தர் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்தாலே தெரிகிறது.
ஸ்ரீராகவேந்த்ரரின் சமாதி, பிருந்தாவனம் எனப்படும் இந்தக் கோயில், ஆந்த்ராவில் கர்னூலிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.


ஸ்ரீராகவேந்த்ரரின் சமாதி, பிருந்தாவனம் எனப்படும் கோயில்


பஞ்சமுகி ஆஞ்சநேயர்  கோயில்



கோயிலுக்கு செல்லும் சாலை 

மனச்சாலம்மா அம்மன் கோயில் 




கோவிலின் உள்ளே இறைவனின் தரிசனம்  போது ஆண்கள் மேற்சட்டையணிந்து போக முடியாது.
இறைவனுக்கு நாள் முழுவதும் பல விதமான சேவைகள் ஆராதனைகள் நடத்தப் படுகின்றது.
ஒவ்வொரு முறையும் கோவிலின் பீடாதிபதி வந்துதான் சேவைகளை நடத்திக் கொடுக்கிறார்.
ஒரு சிறந்த அன்னதானக் கூடமும் இருக்கின்றது.

இந்த பிருந்தாவனத்தின் அருகில் மனச்சாலம்மா என்று ஒரு அம்மன் கோயில் உள்ளது.

பஞ்சமுகி ஆஞ்சநேயர்  கோயில்.

பிருந்தாவனத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
ஸ்ரீமான் ஸ்ரீ ராகேந்த்ரர் சாமிகள் இங்கே 12 வருட காலம் கடும் தவமிருந்து ஹனுமானின் பஞ்ச முக தரிசனம் கண்டதாக வரலாறு.
வராக, கருட, ஆஞ்சநேய, நரசிம்ஹா மற்றும் ஹயக்ரீவா அவதாரங்களே இந்த ஐந்து முகங்கள்.
ஆஞ்சநேயர் இங்கே சுயம்பு வடிவமாக எழுந்தருளியிருக்கிறார்.  

நவ பிருந்தாவனம்.
கர்நாடக  மாநிலத்தில், ஹம்பி (Hambi), ஹோஸ்பெட் (Hospet), அருகில் இருக்கும் மற்றொரு புனித ஸ்தலம். ஸ்ரீ ராகவேந்த்ரரின் அனுஷ்ட்ட தெய்வமான ஹனுமான் ஆழ்வார் பிறந்த புண்ணிய பூமி இது. ராமாயணத்தில் இடம்பெற்ற கிஷ்கிந்தா எனும் வானர பூமி. (பின் நாட்களில் இவர்களைப் பற்றி பார்போம்).
துங்கபத்ரா நதியை படகில் கடந்தால் இங்கு ஸ்ரீ ராகவேந்த்ரரின் குருக்கள் 9 பேரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.
வாலியை ராமன் வதம் செய்த இடம் இதுவென சொல்வார்கள்.
இன்றைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக