வியாழன், 28 நவம்பர், 2013

கஜேந்திர மோக்ஷம்


கஜேந்திர மோக்ஷம்

108 திவ்ய தேசங்களில் ஒன்று தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்ற ஊரில் அமைந்திருக்கும் கஜேந்த்ர வரதர் கோவில். விஷ்ணு பகவான் புஜங்க சயனத்தில் எழுந்தருளியிருக்கும் இருக்கும் காட்சி.
கபிஸ்தலம், திருக் கண்ணமங்கை, திருக் கண்ணபுரம், திருக் கோவிலூர் மற்றும் திருக் கண்ணக்குடி ஆகிய கோவில்கள் பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்களாக விளங்குகின்றன.


 
 
கபிஸ்தலம் கஜேந்திர வரதர் கோயில் 
 
 பகவத் கீதையில் சொல்லப் படும் இந்த கஜேந்திர மோட்சம் என்ற நிகழ்வு இங்கே இடம்பெற்றதாக நம்பிக்கை.    விஷ்ணுவின் அதி பக்தனான பாண்டிய மன்னன் இந்த்ரதுயும்ணன்  ஒரு முறை விஷ்ணு பூசையில்  தீவிரமாக இருக்கையில், அகஸ்த்திய மாமுனி தனது அடிகளார்களுடன் அங்கு வந்தார். அப்போது பூசையில் இருந்த மன்னன் பூசையை விட்டு எழ முடியாமல் அவனது தலையை அசைத்து வரவேண்டும் சுவாமி என்றிருக்கிறான். மேற்கொண்டு அவரை முறையான வகையில் உபசரிக்கவில்லை எனக் கோபம் கொண்ட மாமுனி அவனை ஒரு யானையாக போகக் கடவது என சபித்தார்.பாண்டிய மன்னன் இந்த்ரதுயும்ணன்  கண்ணீர் மழ்கி மன்னிப்புக் கேட்டதால், அவர் மனமிரங்கி அவனுக்கு மகாவிஷ்ணுவினால் பாவ விமோசனம் வழங்கப்படும் என்றார்.அவனும் ஒரு யானையாக இப்புவியில் உருவேடுத்தான்.   இந்தச் சமயத்தில், ஹுஹு எனும் காந்தர்வன்  ஆற்றில்  குளித்துக் கொண்டிருக்கும்  தேவாலா முனிகளின் கால்களை இழுத்ததால், அவர் சினமடைந்து நீ ஒரு முதலையாக உருவாகக் கடவது என சாபமிட்டார்.அவன் மன்னிப்பு கேட்ட பின் சாப விமோசனமாக விஷ்ணு அவனை தனது சக்கரத்தால் கொன்று மோசம் அழைத்துக் கொள்வார் என்றார்.  இப்படியாக இந்த்ரதுயும்ணன் இம்மண்ணில் பலம் பொருந்திய ஒரு யானையாக அவதரித்து காட்டை திறம்பட ஆண்டுவந்தான். இப்போதும் அவன் தனது விஷ்ணு பக்தி குறையாமல் தினமும் அவருக்கு அங்கிருந்த ஒரு அல்லி  குளத்தில் பூக்களை கொய்து பூசை செய்து வந்தான்.அப்போது ஒரு நாள் குளத்தில் இறங்கி பூப் பறிக்கையில், அங்கிருந்த ஒரு பெரும் முதலை அவனது காலைக் கவ்விகொண்டது. யானை  எவ்வளவோ முயற்சித்தும் அதனிடமிருந்து விடுபடமுடியவில்லை.யானையின் உறவுகள் அவனது மற்றைய மூன்று கால்களை ஒருபக்கம் பிடித்து இழுக்க முதலை தண்ணீரிலிருந்து அவனது ஒரு காலை இழுக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டான் மன்னன். இந்த போராட்டம்  பல நாட்கள் நடந்து வந்தது.  உடல் களைத்து போன யானை இனி முயற்சித்து பயனில்லை பகவான் விஷ்ணுவிடம் சரணடைந்து அபயம் கேட்க வேண்டியதுதான் என முடிவு செய்தான். ஆதி மூலமே என அபயக் குரல் கொடுத்தான். பாற்கடலில் ஆதிசேஷன் மேல் மகாலக்ஷ்மியின் அரவணைப்பில் கிடந்த பகவான், யானையின் அபயக் குரல் கேட்டவுடன் எழுந்து கருடாழ்வார் வாகனத்தில் விரைந்து வந்து தனது  விஷ்ணு சக்கரத்தை ஏவி முதலையின் கழுத்தை துண்டாடி ஹு ஹுவை  மோட்சம் கொண்டு சென்றார். அது போல சாப விமோசனம் பெற்ற மன்னனும் மோட்சம் அடைந்தான்.இறைவன் திருவடி  சரணம் எனப் பற்றியவர்கள் இவ்வுலக துன்பங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் அடைவார்கள் என்பது இந்தக் கதையின் நீதி.பக்தர்களின் பாபங்களை போக்கும் இந்த்ரதுயும்ணன் பாப விமோசகன் என அழைக்கப் பட்டான்.

ஹனுமான் இங்கே வந்து இறைவனை வழிபடும் போது ராமன் அங்கே அவனுக்கு தரிசனம் கொடுத்ததாக வரலாறு. கபி என்றால் குரங்கு என்றொரு பொருள் உள்ளதாகையால் அந்த ஸ்தலம் கபிஸ்தலம் என அழைக்கப் படுகிறது.
 
 
 


மீண்டும் அடுத்த வாரம் ஒரு சம்பவத்தோடு சந்திப்போம்.























 



 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக