திங்கள், 25 நவம்பர், 2013

ஒட்டகமும் நரியும்


ஒட்டகமும் நரியும்

கீழ் சொன்ன கதையை பீஷ்மர் யுதீஷ்ரர்ருக்கு சொன்னதாக புராணம் சொல்கிறது. சும்மா இருப்பது என்பதன் கேட்டினை விளக்கும் கதை.




திரௌபதை பாண்டவர்களுடன்.
ராஜா ரவிவர்மன் ஓவியம்



சத்ய  யுகத்தின் போது ஒரு ஒட்டகம் வாழ்ந்து வந்தது. அது அதன் முன் ஜென்ம, பூர்வாசிரம பலா  பலன்களை அறிந்த, எல்லாம் தெரிந்த ஒரு ஒட்டகம் ஆகும்.

அந்த ஒட்டகம் ஒரு முறை பிரம்மாவை நோக்கி ஆகம விதிப் படி காட்டில் கடும் தவம் செய்ய ஆரம்பித்தது. அதன் கடும் தவத்தையும் பக்தியையும் உணர்ந்த பிரம்மா அதன் தவத்தை மெச்சி, வேண்டும் வரத்தை வழங்குவதாக  சொன்னார்.

ஒட்டகம் கேட்ட வரம்.

100 யோஜனை (கிட்டத்தட்ட 1000 மைல்) தூரத்தில் உள்ள உணவையும் நான் சிரமப் படாமல் பறித்து உண்ணும் அளவிற்கு எனது கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும்.

வரம் அளிக்கப் பட்டது.

அத்தோடு ஒட்டகமும் எழுந்து சிரமப் பட்டு, கஷ்டப் பட்டெல்லாம் உணவை உண்ணாமல் எந்த முயற்சியும் இல்லாமல் படுத்துக் கிடந்த இடத்திலிருந்தே கழுத்தை நீட்டி அதற்குத் தேவையான உணவை உலகில் எங்கிருந்தாலும் திண்று விட்டு உறங்கிக் கொண்டிருந்தது.

ஒரு நாள், அப்படி 100 யோஜனை தூரத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து இலை கனிகளை உணவாக கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு பெரிய சூறாவளி வீச தொடங்கியது.
மரம் பேயாட்டம் ஆடியதில் ஒட்டகத்தினால் நிம்மதியாக உணவை உண்ணமுடியவில்லை. ஆகையால், சூறாவளி ஓயும் வரை ஓய்வுகொள்ளலாம் என நினைத்து அதன் கழுத்தையும் தலையையும் அருகில் இருந்த ஒரு மலையின் குகையில் நுழைத்து ஓய்வெடுத்துக் கொண்டது.
அங்கே நிலவிய கடும் மழையும் கடும் குளிரும் அப்போது அங்கு நடுங்கி திரிந்துக் கொண்டிருந்த ஒரு நரியையும் அதன்  மனைவியையும் அருகே தெரிந்த அந்த மழைக் குகைக்கு கொண்டு சென்றது.
பசி மயக்கத்தில் இருந்த அந்த நரிகளுக்கு  ஒட்டகத்தின் கழுத்தையும் தலையையும் பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.
உடனடியாக அந்த கழுத்தின் மீது பாய்ந்து பரபரப்பாக கிழித்து உண்ணத் தொடங்கின.
தனது கழுத்து ஏதோ மிருகங்களால் உன்னப் படுவதை உணர்ந்த ஒட்டகம், தனது கழுத்தை சுருக்கிக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போய் நரிகளுக்கு இறையாகி  உயிர் விட்டது.
நரிகளும் நிம்மதியாக உணவை உண்டு முடித்து நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு சூறாவளி ஓய்ந்த பின் மழைக் குகையை விட்டு வெளியில் வந்து 
சுகமாக வாழ்ந்தன.



.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக