சனி, 11 ஜனவரி, 2014

ஸபரி




ராமாயணக் காலத்தின் பெண் முனிவர்களில் ஒருவர் ஸபரி. வேடவ இனத்தை சேர்ந்த இவர் சிறு வயது முதலே மதங்க ஆஸிரமத்தில் இணைக்கப் பட்டவர். சிறு வயதில் இவர் காட்டினில் காணப்படும் புதிய பழங்களை பறித்து மதங்க முனிவர் செல்லும் வழியில் வைத்திருப்பார். பல நாட்கள் இதை உண்ட முனிவர் ஒரு நாள் இது போல சிரமப் பட்டு பழங்களை வைத்து யார் தன்னை பூசிக்கிறார்கள் என்று தேடும் போது ஸபரி அவர் முன் நின்று தான் செய்து வந்ததாக சொன்னார். அன்று முதல் அவர் ஆஸிரமத்தின் ஒரு அங்கமானார்.
இறக்கும் தறுவாயில் மதங்க முனிவர் ஸபரியை அழைத்து விரைவில் ராம பிரான் இந்த ஆஸிரமத்திற்கு வருவார் எனவும் அவரை குறையேதும் இன்றி உபசரித்து வணங்கவேண்டும் என்றும் கூறினார். இப்போதுதான் மதங்க மாமுனிவரின் சீடர்களின் வியர்வை துளிகள் யாவும் பூக்களாக மாறி முனிவருடன் அவர்களும் சொர்க்கம் எய்தினர் என்று புராணம் சொல்கிறது. ஸபரி, ராமனின் வரவிற்காக அங்கேயே காத்திருந்தார்.

சீதையை தேடி ராமனும் லக்ஷுமனனும் வருகையில், வழியில் கபந்தன் என்பவனை கொல்ல நேரிட்டது. இறந்த கபந்தன் அசுரனாக மாறி மதங்க ஆஸிரமத்தில் ஸபரி அவர்களுக்காக காத்திருப்பதாக கூறினான். ராமனும் லக்ஷ்மனனும் ஸபரியை காண ஆஸிரமத்திற்கு சென்றனர். ஸபரி அவர்களை கண்டதும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து பூக்களும் பழங்களும் கொண்டு பூசித்தார்.
பின்னர் ஸபரி அவர்களை வேண்டி தவமிருந்து மான் தோலுடன் நெருப்பில் ஊடுருவி இந்த பூவுலக பந்தங்களில்ருந்து விடுபட்டு சாத்வீக தேவதையானார்.

ராமரின் ஆச்சர்யா பக்தியுடனும் அர்ச்சனா பக்தியுடனும் ஸபரி ஆச்சர்யனாக பரமபதத்தை அடைந்து ராம பிரானின் ஆசியுடன் மதங்க முனிவருடன் சொர்க்கத்தை சென்றடைந்தார்.

ஸ்ரீ ராம பிரான் ஜடாயு, குகன் மற்றும் ஸபரி என மூவருக்கு இவ்வுலகில் மோட்சத்தை கொடுத்தவர்.
வயதில் மூத்த ஸபரி தனது இறுதிக் காலத்தில் தனியாக யார் உதவியுமின்றி வாழ்ந்து சதா சர்வ காலமும் ஸ்ரீராமனின் புகழையே பாடிக் கொண்டிருந்தார். அவரது வரவிற்காக ஆஸிரமத்தில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.

கிஷ்கிந்தையில் தாரா, லங்கையில் மண்டோதரி, அயோத்தியில் சுமித்ரா, மாதங்க ஆஸிரமத்தில் ஸபரி என இவர்கள் அனைவரும் ஸ்ரீராமனே இந்த அண்டத்தின் பரிபாலன் என கருத்தப் படும் பரதத்வம் என நம்பினர்.

தசதரரின் மகனான ஸ்ரீராமன் சிவம், சத்யம், சுந்தரம், தர்மம், கருணை, அழகு, உண்மை, நீதி, அன்பு மற்றும் புருதோதமம் அனைத்தும் தன்னுள் கொண்டவன் என்று பாடுகிறார் தியாகராஜ ஸாமிகள்.
இதையே தனது கருத்தாக கொண்டு இதற்கு முன்பு ஸ்ரீராமரை போற்றிப் பாடினார் ஸபரி. தாழ்ந்த இனமாக இருந்தும் அதி புத்திசாலியாக இல்லாதிருந்தும் அவர் தனது நிறைந்த மனதினால், நல்லது நடக்கும் போது ஆரவாரம் செய்யாதிருப்பதும் பாதகம் நேரும் போது விசனப் படாமல் இருப்பதும் அவருக்கு இயல்பாயிற்று. அதனால் அவர் இறை அருளைப் பெற்றார்.
அவர் இறைவனை சந்திக்கவும் அவரது அருளை பெறவும், இறைவன் திருவடி சேரவும் ஒன்பது வகையான பக்திகளை போற்றினார்.
ஸ்ரவனா: இறைவன் அருட்கதைகளை கேட்பது
கீர்த்தனா: இறையருளை போற்றிப் பாடுவது
ஸ்மரனா: இறைவன் பெயரை என் நேரமும் ஜபிப்பது
பாதசேவனா: இறைவன் திருவடிகளை பற்றிவது
அர்ச்சனா: இறைவனை வணங்குவது
வந்தனா: இறைவனுக்கு நம்மை சமர்ப்பிப்பது
தாஸ்யா: இறைவனுக்கு வேலைகாரனாக இருப்பது
ஸாக்யா: நம் மனதை இறைவனின் நிலமாக்கி பண்பட செய்வது
ஆத்ம நிவேதனா: நம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பது ஆகியவன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக