புதன், 7 ஆகஸ்ட், 2019

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்

16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம் இது தான்.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்























.

பண்ருட்டியின் மிக அருகில் உள்ள ஒரு கலை சிறப்பு மிக்க கோவில்.

பிரமாண்டமான லிங்கம். வழக்கமான உருளையாக இல்லாமல் பட்டை பட்டையாக 16 பட்டைகளை லிங்கத்தில் தாங்கி பிரகாசிக்கும் சிவன்.

திருநெல்வேலி அருகில் உள்ள, களக்காடு சிவன் கோவில் போல மிக பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது.

கட்டிடக் கலையிலும், சிற்பக் கலையிலும் தங்கள் கை வண்ணத்தை பிரமாதமாக வெளிபடுத்தி உள்ளனர். நம் வாழ் நாளில் கண்டிப்பாக காண வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.

தல வரலாறு :

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் . திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.

வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன்,வெள்ளி,

இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.

இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.

தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி

பிரம்மாவை சாரதியாக்கி சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

அச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின.

தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து சிவபெருமான் வில், அம்பு என எதையும் பயன்படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிரித்தார்.

அசுரர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்களின் உதவி இல்லாமல் ,அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் தலைகுனிந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

இத்திருக்கோவிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில்
தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் எங்கிறார்கள்.

சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.இவர் முதன்முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த
தலம்.

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்த தலம்.

ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.

திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் “சூலை தந்து ஆட்கொள்வோம்” என்று பதிலுறைத்த பதி.

இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது.

இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன.

நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. புன்னகை தவழும் முகம், புன்னகை சிந்தும் உதடுகள், சற்றே மூடிய நிலையிலான கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள் போன்ற கூறுகளுடன் மேலாடையுடன் இச்சிலை உள்ளது.

இந்த கோவில் கோபுரமும் நிழல் தரையில் படாது எங்கிறார்கள்.

பல்லவ மாமன்னன் மகேந்திரவர்மன் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்த பிறகு, அவனுக்கு பிறகு ஆட்சி புரிந்த, பரமேஸ்வரவர்ம பல்லவன் கருங்கற்கள் அமைப்பினால் கருவறையைக் கட்டி, செங்கல் சுண்ணாம்புச் சுதையால் விமானத்தை எழுப்பி அதில் அழகிய சிற்பங்களை அமைத்த பெருமை உடையவன். கி.பி 720-725-க்குள் கருவறையும், விமானமும் கட்டப்பட்டு விட்டன. பல சிறிய கோயில்களைக் கொண்ட இந்த கருவறை விமானம் 100 ச.மீ. பரப்பளவின் மீது 10.2 மீட்டர் நீளமும், 9.8 மீ. அகலமும் கொண்ட கருங்கற்களால் ஆன அதிட்டானத்தின் மீது உள்ள விமானம் 100 அடி உயரம் கொண்டது. அடிப்பாகத்தில் இருந்து உச்சிவரை சுதைச் சிற்பங்களைக் கொண்டது. இதுபோல் வேறு எங்கும் காண முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக