வியாழன், 7 நவம்பர், 2019

புலிக்கோண்டு, பெனமனூர், சித்தூர்





















புலிக்கோண்டு, பெனமனூர், சித்தூர்..

சென்னையில் காலை 6 மணிக்கு புறப்பட்டால் காலை 10 மணிக்கு ஆந்திரா சித்தூர் தாண்டி 18 கிமீயில் இருக்கும் புலிக் கோண்டு அல்லது புலிக் கூண்டு அல்லது புலிக் கோண்டா...
இரட்டை மலைகள் சிவலிங்கங்கள் போல. மேலே ஒரு சிவன் கோவில். அடிவாரத்திலும் ஒரு குகைக் கோவில் சிவனுக்கு. தல புராணம் அங்கே யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் நமக்கு புரியபோவதில்லை. லோக்கல் பூசாரி. 10ரூ தட்டில் போட்டதுக்கே கருவறையை திறந்துவிட்டுவிட்டார். திருப்தியாக போட்டோ எடுத்துகிட்டாச்சி.
பட்டையான சுயம்பு சிவலிங்கம். அதற்கு முன்பு வழக்கமான ஒரு சின்ன சிவ லிங்கம். இரண்டு சின்ன பாறைகளுக்கு நடுவே சிவன் குடித்தனம். உண்மையில் குகையல்ல. வெளியில் பெரிய கலர் நந்தி. பழைய எண்ணெய் விளக்கு... பிரதோஷங்களில் விஷேசமாம்..
அங்கிருந்து 2,3 கிமீ நடந்து போனால் மலையேற ஆரம்பிக்கலாம். செங்குத்தான மலை.ஏறுவது சிரமமே. 2/3 மணி நேரம் ஆகலாம். நாங்கள் மற்ற கோவில்களை முடித்து அங்கே போகும் போது மணி மதியம் ஒன்று. சாப்பிட வேறே இல்லை. இதில் எங்கே மலையேறுவது?

மலைக்கு போகும் பாதையே கரடு முரடாகத்தான் உள்ளது. மழை பெய்யாத காலத்தில் மலையை நெருங்கி காரில் போகலாம் போலிருக்கிறது. இப்போது பெரும் பாறைகள் நீட்டிக் கொண்டு நிற்கின்றன. அப்படியே கீழிருந்தவாரே போட்டோக்களை அள்ளிக் கொண்டோம். நேற்று நல்ல கால நிலை. வெயிலும் இல்லை மழையுமில்லை. இனிமையாக போயிற்று ஆன்மீக பயணம்.

ஆற்காட்டில் வலதுபுறம் திரும்பி, திருவலம் வழியாக பொன்னை- சித்தூர் சாலையில் சித்தூர், அடுத்து புலிக் கோண்டா போவது சுகமான பயணம். அர்த்தகிரி, கனிப்பாகம் போக சித்தூருக்கு வேறு வழியில் போகனும். ஒரே குண்டும் குழியும், தூசியுமாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக